Monday, July 7, 2008

2020ல் மனித அறிவுக்கு இணையான கணினி..!

மனித அறிவுக்கு இணையாக செயல்படக் கூடிய கணினி வரும் 2020ம் ஆண்டுக்குள் சாத்தியமாகும் என அமெரிக்க கம்ப்யூட்டர் வல்லுனர் குருரே கர்ஸ்வில் தெரிவித்துள்ளார். லண்டனில் நடந்த அறிவியில் முன்னேற்றத்திற்கான அமெரிக்க கூட்டமைப்பு ஆண்டுக் கூட்டத்தில் பேசிய போது இதனை தெரிவித்த அவர், அக்சலர்ரேட்டிங் ரிட்டர்ன்ஸ் விதி' ( law of accelerating returns) இதற்கு பேருதவியாக இருக்கும் என தாம் நம்புவதாக கூறினார். தொழில்நுட்பத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதால், மனித அறிவை மிஞ்சும் நவீன கணினியும் உருவாக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்றும் குருரே தெரிவித்தார். மனிதனின் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் முதுமை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்தால் மனித ஆயுளை நீட்டிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


பதிவு:திரு.திருமாறன் (HND-19)

1 comment:

Krishna said...

இப்பொழுதே கணிணியின் அபரீதமான வளர்ச்சியால் மனிதன் எப்படி ஆகிவிட்டான் என்பது அறிந்ததே..உங்கள் கருத்து என்ன திருமாறன்..