கண்டம் விட்டுக்
கண்டம் பாயும்
அழிவுச் சக்திமிக்க
ஏவுகணைகள்!
வானிலும்
ஒற்றர்களாய்
விண்கோள்கள்!
விண்ணில்
மண்ணில் நீரில் பயணம்
செய்திட
புதுமைகள் மிக்க
வாகனங்கள்!
உலகின் நிகழ்வுகளை
உடனே அறிந்திட
தொலைக்காட்சி
வானொலிகள்!
பூவுலகின்மூலை
முடுக்கெல்லாம்தொடர்பு
கொண்டிடதொலைபேசி
செல்பேசிகள்!
பரந்த பூபாளத்தைச்சிறு
அறைக்குள்சுருக்கி விட்டதகவல்
தொழில் நுட்பம்!
வெப்ப குளிர்
பிரதேசங்களில்
வசிப்பவர் வசதிக்காக
குளிரூட்டி வெப்பமூட்டிகள்!
பழுதடைந்தஉறுப்புகளுக்குப்
பதில்மாற்றுறுப்பு பொருத்தங்கள்!
இன்னும் சொல்லிமாளா
எத்தனை யெத்தனை
யோசாதனைகள் புதுமைகள்
இவ்வறிவியல் யுகத்தில்!
இருப்பினும்அடிக்கடி
நிகழ்கின்றனநோய்தடுப்பு
மருந்துகளால்
மழலையரின் மரணங்கள்!
இவற்றுக் கெல்லாம்யார் பொறுப்பு?
எப்படி தவிர்க்கப் போகிறோம்?
(அண்மையில் இந்தியாவிலே நோய் தடுப்புமருந்து மாற்றி ஏற்றப்பட்ட மரணமடைந்த குழந்தைகளினை ஞாபகப்படுத்துமுகமாக இப்பதிவு அமைகின்றது..)
பதிவு: திரு.திருமாறன் HND-19
Monday, July 7, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment