அண்மையில் தமிழ் தட்டச்சிலே ஒரு புதிய மாற்றம் என்று தான் கூறவேண்டும். ஆம் இதுவரைகாலமும் சுரதா யாழ்வாழ்வாணனின் ஒன்லைன் தமிழ் தட்டச்சு செயல் நிரலியைத்தான் பயன்படுத்தினோம். அத்துடன் சிலர் வேறு நிரலிகளையும் பயன்படுத்தினார்கள். ஆனால் தற்போது என்.ஏச்.எம் நிறுவனத்தின் தட்டச்சு செயல்நிரலி அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு. இதற்கு முன்னரும் தமிழ் எழுத்துருக்களிற்கான ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்கள். அந்த பிழைகள் திருத்தப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று வந்துள்ளது. விஷேடமாக புதிய தட்டச்சு செயல் நிரலியைப்பற்றி கூறவேண்டுமெனில், இந்நிரலி தன்னகத்தே தமிழின் பல்வேறு வகையான எழுத்துருக்களினை கொண்டுள்ளது. இதனால் எந்த வகையான நிலைக்கும் எமது தமிழ் எழுத்துருவினை மாற்றியமைக்கலாம். இவற்றுடன் இன்னமொரு இனிப்பான செய்தி....!! ஆம்! இந்நிரலி இலவசமாகவே கிடைக்கின்றது. "எமக்கு இலவசம் என்றாலே போதும் தானே..." ஒரு வழி பண்ணிப்போடுவீங்கள்...! நான் அதனைப்பயன் படுத்தித்தான் இப்பதிவை தளத்தினிலே பதிந்துள்ளேன். அட ஏன் தாமதம்..! கீழே இலவசப்பதிவிறக்கத்திற்கான தொடர்பினை தந்துள்னேன். முயன்றுபாருங்கள்.. கட்டாயம் பயனர்கையேட்டினையும் சேர்த்து பதிவிறக்கம் செய்யுங்கள்.(மேலதிக உதவிக்காக)..
தட்டச்சு நிரலி: http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
எழுத்துருமாற்றி:
http://software.nhm.in/Products/NHMConverter/tabid/60/Default.aspx
Thursday, July 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nanri nanpare.uthaviyaka irunthathu.
Post a Comment